இன்றைய செய்தி

Post Top Ad

15 September 2021

சுகாதார கட்டுப்பாடுகளுடன் 21 நாடு திறக்கப்படும் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு..!

 


நாட்டில் எதிர் வரும் 21 ஆம் திகதி வரை தனிமை படுத்தல் ஊரட‌ங்கு உ‌த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன நிலையில் 21 ஆம் திகதி கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும் என ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் தொற்று நோய், கொவிட் கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


இது தொட‌ர்பாக அவ‌ர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நான்கு வாரங்களாக தனிமை படுத்தல் ஊரட‌ங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தமையால் தற்போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அத்துடன் கொரோனாவினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைய தொடங்கியுள்ளது.


கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பது குறித்து கொவிட் செயலனி கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது, எனவே எதிர் வரும் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதுடன் விரைவாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்க முன்னெடுக்கவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad