12 வயதுக்கு மேற்பட்ட சகல சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்காகு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்டார். அவர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். இன்று எமது அரசாங்கத்தின் ஊடாக எமது பிள்ளைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கொவிட் - 19 நோய் தடுப்பிற்கு எதிராக நாட்டின் முப்படை உட்பட காவல்துறையினரும், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அரச தனியார் துறை ஊழியர்கள் என கொவிட்-19 என்னும் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக போராடி வருகின்றனர்.
No comments:
Post a Comment