இன்றைய செய்தி

Post Top Ad

16 August 2021

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு..

 

12 வயதுக்கு மேற்பட்ட சகல சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்காகு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று குறிப்பிட்டார். அவர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். இன்று எமது அரசாங்கத்தின் ஊடாக எமது பிள்ளைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வரலாற்று ரீதியாக, உலகம் பல்வேறு தொல்லைகளை எதிர்கொண்டது. எவ்வளவு தொழில்நுட்ப ரீதியாக நாம் முன்னேறியிருந்தாலும், கோவிட் 19 போன்ற தொற்றுநோய்களுக்கு உறுதியான தீர்வு காண்பது கடினம் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எனவே இவ்வாறான நேரத்தில் கொவிட் - 19 போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராக ஒற்றுமையுடன் வலுவான எதிர்ப்பையும் மேற்கொள்ள வேண்டும். 

கொவிட் - 19 நோய் தடுப்பிற்கு எதிராக நாட்டின் முப்படை உட்பட காவல்துறையினரும், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அரச தனியார் துறை ஊழியர்கள் என கொவிட்-19 என்னும் தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக போராடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad