இன்றைய செய்தி

Post Top Ad

16 August 2021

மண்டபம், வீடுகளில் திருமண வைபவங்களுக்கு தடை...

 



நாளை 17ம் திகதி முதல் மண்டபங்கள், வீடுகளில் திருமண வைபவங்களை நடாத்த தடை விதிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர் தெரிவிக்கையில் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நேற்று நள்ளிரவு 15 ம் திகதி தொடக்கம் மக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உணவகங்களில் அதன் கொள்ளளவிற்கு 50 வீதமானோரே ஒரு நேரத்தில் இருக்க வேண்டும் என்றும் சன நெரிசல் உள்ள பகுதிகளில் ஒன்று கூடுவதை தவிர்த்து கொள்ளும்படியும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.. 


No comments:

Post a Comment

Post Top Ad