கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை முதலாம் மாடியில் கழிப்பறையொன்றிலிருந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது என காவல் துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட கைக்குண்டு பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment