முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்றய தினம் 6ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கிற்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட சம்பவத்தின் 5 ஆவது சந்தேகநபர் என்ற ரீதியில் ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதவான் ரஜின்த்ரா ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment