உதைபந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளின் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
நேற்று முன் தினம் போர்த்துக்கலில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கிடையிலான சர்வதேச போட்டியிலே ரொனால்டோ இந்த சாதனையை படைத்துள்ளார், குறித்த அந்த போட்டியில் போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸட்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்ததன் மூலம் ஆடவர் சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களை அடித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த அலி டெய்யின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் பெற்ற இரு கோல்களுடன் அவர் 111 கோல்களை பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக அதிக கோல்களை பெற்றவர்களின் இடத்தில் அலி டாய் 109 உள்ளார்.
No comments:
Post a Comment