இன்றைய செய்தி

Post Top Ad

04 September 2021

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க முன்னெடுக்க திட்டம் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு....!!

 



மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (03) நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அத்துடன் 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியேற்றும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார தரப்பு, பாதுகாப்பு தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி  நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad