மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டம் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03) நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அத்துடன் 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.
No comments:
Post a Comment