இன்றைய செய்தி

Post Top Ad

16 September 2021

நாட்டை திறப்பது குறித்து இராணுவ தளபதி வெளியிட்டுள்ள கருத்து...!

 


எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான
வாய்ப்பு உள்ளதாகஇராணுவத்
தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்
தேசிய கொவிட் தடுப்புச் செயலணி
கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்
தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகள் குறித்து
இந்த வாரம் சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிந்துரைகளின் படி நாடு
திறக்கப்படும் முறை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் நாடு திறக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு
இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்
துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad