தலைமன்னார் கடற்கரை பகுதியில்
செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக இலங்
கைக்கு கொண்டு வரப்பட்ட 9 கிலோ
914 கிராம் ஐஸ் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்
தின் பேரில் நால்வர் கைது செய்யப்
பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரால் கண்காணிப்
புக்கள் முன்னெடுக்கப்பட்டபோது
சந்தேகத்துக்கிடமான படகொன்று
சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது 10 பொதிகளாக
பொதியிடப்பட்டிருந்த ஐஸ் ரக
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்
பட்ட ஐஸ் போதைப்பொருளின்
பெறுமதி 79 மில்லியன் ரூபாவாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
கள் 28 – 37 வயதுக்கு இடைப்பட்ட
தலைமன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேகநபர்கள் கைப்
பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள்
மற்றும் படகுடன் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக மன்னார்
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Post Top Ad
16 September 2021
போதை பொருளுக்கு பிரபலமாகி வரும் மன்னார் மாவட்டம்..!
Tags
உள் நாட்டு செய்திகள்#
Share This
About Allin1newz
உள் நாட்டு செய்திகள்
Tags
உள் நாட்டு செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment