இன்றைய செய்தி

Post Top Ad

17 August 2021

கொவிட் - 19 தொற்று தொடர்பான வட மாகாணத்தில் அமுல்படுத்தப்பட உள்ள புதிய திட்டம்

 


வட மாகாணத்தில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை இன்று முதல் வீட்டில் வைத்து சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் இது தொட‌ர்பாக இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கொவிட் தொற்று உடையவர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.  தற்போது இத்திட்டமானது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் 16ம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை அப்பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி தொடர்பு கொண்டு அவர் இத்திட்டத்திற்கு  தகுதியானவரா என்று பரிசோதனை செய்து இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவார்

இதன் போது கீழ்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். கொவிட் தொற்றுக்கு உள்ளானவர் 2 தொடக்கம் 65 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். கொவிட் தொற்று நோய் அறிகுறி எதுவும் இல்லாதவராக இருக்கு வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள் எனில் அவர்கள் 24 வாரங்களிற்குட்பட்ட கர்ப்பவதிகளாக இருத்தல் வேண்டும்.

வேறு நோய் நிலைமை உள்ளவர்கள் அந்த நோய் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். நோயாளியின் வீடானது ஏனையவர்களிடமிருந்து நோய் பரவாது தனிமைப்படுத்தி வைத்திருக்ககூடிய வசதியை கொண்டிருத்தல் வேண்டும். தொலைபேசி மூலம் நேயாளியின் நாளாந்த நிலமையை அறிந்து கொள்ளகூடிய வசதியை கொண்டிருத்தல் வேண்டும் .

சுகாதார வைத்திய அதிகாரியினால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவார் அத்துடன் அவரது விபரங்கள் மத்திய சுகாதார அமைச்சில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கணனி மென்பொருளில் தரவேற்றம் செய்யப்படும். அத்துடன் பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அழைப்பு நிலையத்தில் இருந்து வைத்தியர்கள் தினமும் நோயாளியினை தொடர்பு கொண்டு நோயாளியின் உடல் நிலைமையினை கண்காணிப்பர்.
இதன் மூலம் தேவை ஏற்படின் நோயாளியும் அவரின் வீட்டாரும் அவ் வைத்தியரினை தொடர்பு கொள்ளமுடியும். அந் நோயாளியின் உடல் நிலை மோசமடையும் சந்தர்ப்பத்தில் நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்ததால் அத்தகவலை உடனடியாக பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரிக்கு அறிவிப்பதை தொடர்ந்து அவர் அந்நோயாளியினை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளினை செய்வார்.

பி.சி.ஆர் செய்யப்பட்ட முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நோயாளியும் இவ்வாறு 10 நாட்கள் வீட்டுப்பராமரிப்பில் வைத்திருக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad