யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தியமை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு பிரதேசத்திற்குள் பட்டா மற்றும் மோட்டார் சைக்கிள் ஊடாக நுழைந்த படையினர் வீதியில் ஒளிர்ந்துகொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
படையினர் தம்மைத் தாக்கியமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நள்ளிரவே அறிவித்திருந்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதராமல் அடுத்த அதிகாலையே வந்து விசாரணை நடத்தியதாகவும் மக்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment