நாட்டில் கோவிட்-19 தொற்று தீவிரமடைந்து வரும் இந்நிலையில் நாட்டினை முடக்குமாறு சுகாதார தரப்பு மற்றும் அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் இந்நிலையில் நாளை நள்ளிரவு தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை நள்ளிரவு தொடக்கம் நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதியால் தீர்மானம் எட்டுக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக செய்தி பிரிவிற்கு தொடர்பு கொண்டு வினவிய போது, இது வரையில் முடக்கம் தொடர்பாக எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று , இன்று மாலையளவில் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment