இன்றைய செய்தி

Post Top Ad

19 August 2021

நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா?




நாட்டில் கோவிட்-19 தொற்று தீவிரமடைந்து வரும் இந்நிலையில் நாட்டினை முடக்குமாறு சுகாதார தரப்பு மற்றும் அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் இந்நிலையில் நாளை நள்ளிரவு தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை நள்ளிரவு தொடக்கம் நாட்டை முடக்குவதற்கு  ஜனாதிபதியால் தீர்மானம் எட்டுக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது 

இவ்றான சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பொது நடைமுறைகள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான அவசர சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இது தொட‌ர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக செய்தி பிரிவிற்கு தொடர்பு கொண்டு வினவிய போது, இது வரையில் முடக்கம் தொடர்பாக எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று , இன்று மாலையளவில் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad