மாகாண எல்லையை கடந்து செல்லக்கூடிய யார் என்பது தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார சேவை, பொலிஸார், முப்படையினர், அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள் அத்தியாவசிய பொருள் விநியோகம், மற்றும் மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்), துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்) ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment