பொகவந்தலாவ – ஆரியபுர பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில், சுகாதார விதிமுறைகளை மீறி, நடைபெற இருந்த திருமண வைபவம் ஒன்றினை , பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ் தொற்று காரணமாக, திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்த போதிலும், சுகாதார முறையினை மீறி இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் சுமார் 25கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த திருமண மண்டபத்துக்கு விரைந்த பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார், அங்கு கூடியிருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றியுள்ளனர்.
அத்துடன், மணமகன், மணமகள் இருவீட்டாரின் பெற்றோரை கொண்டு மாத்திரம் திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த திருமண மண்டபத்தின் உரிமையாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment