நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை கூறியுள்ளார்.
நேற்று இரவு 20 ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந் நிலையில், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் சட்டங்களை கடுமையாக்கவும் வலியுறுத்தியுள்ளார் .
ஆயினும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment