இன்றைய செய்தி

Post Top Ad

04 September 2021

நியூஸிலாந்து சந்தையில் 6 பேரை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைப் பிரஜை ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டார்...!!!

 



நியூஸிலாந்தில் ஒக்லாந்து நகரில் உள்ள சிறப்பு சந்தையில் குறித்த சம்பவமானது இலங்கை பிரஜை ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளர்.

கத்தி குத்துக்கு இலக்கானவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கத்தி குத்து தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பவற்றினால் சற்று நேரம் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது,

மேலும் இந்த தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர் கூறுகையில் தீவிரவாத தாக்குதல் என்றே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கையர் என்றும் நியூலைன் மாவட்டத்தில் கவுண்ட்டவுன் சிறப்பு சந்தையில் நுழைந்து சம்பவத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad