பங்களாதேஷில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த 543 நாட்க்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் திறக்கப்பட்டன.
அந்த நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , கட்டுப்பாடுகளைத் தளா்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் பாடசாலைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அலட்சியம் செய்யப்பட்டு, நோய்த்தொற்று அவை மீண்டும் தீவிரமடைந்தால் மீண்டும் பாடசாலை மூடப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது
No comments:
Post a Comment