வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ''மாநாடு'' இதில் கல்யானி பிரியதர்ஷன் நாயகி, எஸ். எ. சந்தரசேகர், எஸ். ஜே. சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இதன் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் மாநாடு திரைப்படம் தீபவளிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோன பிரச்சினையால் தியட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் தீபாவளிக்குள் 100% திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் படம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளியன்று சிவா இயக்கத்தில் அண்னாத்த திரைப்படம், அஜீத்தின் வலிமை திரைப்படம் அந்நாளில் வெளியிடுவது தொடர்பாக பேசப்பட்டு வருன்றது.
No comments:
Post a Comment