தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர் வரும் 21 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்ட விசேட ஹோட்டல்கள், மற்றும் விசேட அனுமதி பத்திரம் பெற்ற இடங்களில் மாத்திரம் மது விற்பனைக்கு மதுவாரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மதுவாரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமராசிங்க தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தெரிவு செய்யப்பட ஹோட்டல்களலில் மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்காக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
No comments:
Post a Comment