2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் 4 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு மூவர் அடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் நேற்று 13 ஆம் திகதி தீர்மானித்துள்ளது.
அதன்படி மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு அழைப்பாணை விடுமாறு நீதி மன்ற பதிவாளருக்கு கட்டளையிட்டது. நட்சத்திர ஹேட்டல் மூன்று தேவாலயம் உள்ளிட்டவற்றின் மீது இலக்கு வைத்து 2019 ஆண்டு ஏப்ரல 21 ஆம் திகதியன்று 8 குண்டுதாரிகளால் நடாத்தப்பட்ட ஈஸ்ட்டர் தின பயங்கரவாத தாக்குதலில் 8 பேரும் உள் நாட்டு, வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இதில் 269 பேர் பலியாகினர், 500 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் இது தொடர்பாக நீண்ட காலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் வழக்கை துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்க்காக 3 நீதிபதிகள் அடங்கிய '' டிராயல் அட-பார்'' அண்மையில் நியமிக்கப்பட்டது.
No comments:
Post a Comment