இன்றைய செய்தி

Post Top Ad

19 September 2021

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது...!

 


2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்றைய தினம் 19 ஆம் திகதி காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.


இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்கு இது போதுமானது இருக்கும் என இராஜாங்க அமைச்சரும் பேராசிரியருமான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


இதன்படி இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடி 19 இலட்சத்து 19 ஆயிரத்தி 413 பேரில், 

50 % மானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் பேராசிரியருமான சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்

No comments:

Post a Comment

Post Top Ad