இன்றைய செய்தி

Post Top Ad

19 September 2021

நீர்வேலிப் பகுதியில் விபத்து இளைஞர் பலி..!




நீர்வேலி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய டிலக்சன் எனும் இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தின் முன்பாக நேற்றைய தினம் (18) ஆம் திகதி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலையே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.


குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த சீமெந்து கட்டுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளான்.


இந்த சம்பவத்தின் போது, கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. இதனால் படுகாயமடைந்த இளைஞன் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து  அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad