மன்னாரில் மின் தகன நிலையத்தின் அவசியத்தை மன்னார் நகர சபை உணர்ந்துள்ளது இதற்க்கான இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்வதாக விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் கொரோன தொற்று காரணமாக மரணிப்போரின் உடல்களை தகனம் செய்வதற்காக வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது இது பெரிய அசௌகரியமாக உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் செவ்வாய்க்கிழமை செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபைக்குட்பட்ட பொது மயானத்தில் உடனடியாக மின்தகன நிலையம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் உணர்த்தப்பட்டு அதற்க்கான நிதி உள்ளூராட்சி சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் நிதி கோருவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மன்னார் நகர சபை தலைவர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment