பிலிபைன்ஸினால் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று 06 ஆம் திகதி முதல் குறித்த தடை நீக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம், தாய்லாந்து, ஒமான், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
பயணத்தடை நீக்கப்பட்டிருந்தாலும் மேற்குறித்த நாடுகளில் இருந்து பிலிபைன்ஸிற்கு வருவபவர்கள் 14 நாட்கள் தனுமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment