இன்றைய செய்தி

Post Top Ad

07 September 2021

தாயின் சீலையால் பறிபோன மகளின் உயிர்...!!

 


11 வயது சிறுமி ஒருவர் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுகி மரணமடைந்த சம்பவம் ஒன்று தெரணியகல, மாலிபொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த குறித்த சம்பவத்தில் கெரோனிடா தில்மி என்னும் சிறுமியே பலியானார்.
குறித்த சிறுமி தனது சகோதரர்களுடன் படுக்கையறையில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுமியின் தந்தை மாலிப்பொட தோட்ட வேலையாக சென்று இருந்தார் தாயார் சமையலில் ஈடுபட்டிருந்தார்.

சமையல் வேலை முடிந்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்த அறைக்கு சென்ற போது அறை உள் தாழ்ப்பாள் இடப்பட்டிருந்தது தாயார் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார்.

இதன் போது சிறுமி ஊஞ்சலில் சிக்கியிருப்பதைக் கண்டு அயலவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்டு தெரணியகல வைத்திய சாலையில் அனுமதித்த போதே இறந்துள்ளார்.

இது தொட‌ர்பான விசாரணைகளை தெரணியகல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad