இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

தமன்னா எழுதிய புத்தகம்...

 



தமிழில் பையா, சுறா, அயன், சிறுத்தை, வீரம், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமன்னாவிற்க்கு பாகுபலி படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது, தற்போது 7தெழுங்கு படங்களிலும் 2 ஹிந்தி படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தமன்னா புதிதாக புத்தகமொன்று எழுதி எழுத்தாளராகவும் மாறியுள்ளர் அதில் பண்டைக்காலத்தில் இந்திய மக்கள் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுளை நீட்டிப்பதற்க்கான வழிமுறைகள் குறித்து அவர் அதில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமன்னா தான் எழுதி புத்தகம் குறித்து கூறுகையில் ''இது  நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேரவேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை மக்கள் அறிந்து கொள்வார்கள் வேகமாக வளர்ந்து செல்லும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் எமது கலாச்சார பண்பாட்டை விளங்கிக் கொள்வது முக்கியம்'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad