இன்றைய செய்தி

Post Top Ad

02 September 2021

இலங்கையில் தடுப்பூசியை பெறுவதில் மக்கள் ஆர்வம்...!!!

 



இலங்கையில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது இதன்படி 81,69,232 பேர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் 24 இலட்சத்து 68 ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது, கடந்த 31 ஆம் திகதி மாத்திரம் 41 ஆயிரத்தி 166 பேருக்கு சீனாவின் சினோபாம் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் 4 இலட்சத்து 42 இரண்டாயிரத்து 237 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை 4 ஆயிரத்து 18 பேருக்கு கொவிஸீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் தடுப்பூசியின் இரண்டாவது 485 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது (கடந்த 31 திகதி)
மேலும் 17 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஆயிரத்தி 645 தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது (31 ஆம் திகதி)

No comments:

Post a Comment

Post Top Ad