இன்றைய செய்தி

Post Top Ad

04 September 2021

தெடரை வெல்லும் நோக்கில் களம் இறங்கும் இலங்கை அணி...!!!

 


தென்னாபிரிக்காவிற்கு எதிரான 1 ஆவது போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதையடுத்து இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தொடரையும் கைப்பற்றும் களம் இறங்குகின்றது.

தென்னாபிரிக்கா அணி இலங்கை அணிக்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டு மூன்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இதில் அவிஷ்க பெர்ணான்டோ அபாரமாக விளையாடி சதமடித்து 118 ஓட்டங்களை பெற்றார்.

இந்த போட்டியில் 301 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் ஆட்டக்காரர் மார்க்ராம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், டெர்டூசன் 59 ஓட்டங்கள், பவுமா 38, கிளாசன் 36 ஓட்டங்களுமாக முடிவில் தென்னாபிரிக்கா அணி  6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

No comments:

Post a Comment

Post Top Ad