இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

இன மத வேற்றுமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றப்படுகிறதா...?


நாட்டில் இன, மத, மொழி வேற்றுமையின் அடிப்படையில் அடிப்படையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பைசர் தடுப்பூ ஏற்றப்படுவது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் அதற்கு பதிலளித்துள்ளார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில்,

தடுப்பூசி ஏற்றப்படும் மாவட்டம் மற்றும் தடுப்பூசி பற்றிய எந்தவிதமான தீர்மானமாக இருந்தாலும் அதாவது அதன் எண்ணிக்கை, எந்த வகை தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சே தீர்மானமெடுக்கும். 
கடந்த காலங்களில் மன்னார், கண்டி போன்ற இடங்களில் தடுப்பூசி தொடர்பாக இந்த குற்றம் சுமத்தப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

  சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் அமைய தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்றும் மாவட்டத்தைப் பார்த்து தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad