கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம் எட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிரூபம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொவிட் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்க அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment