இன்றைய செய்தி

Post Top Ad

05 September 2021

பாடசாலை மீள திறப்பது தொடர்பாக வெளியான அறிவிப்பு..!!




 எதிர்வரும் ஒக்டோபர்

மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முழுமையான வேலைத்திட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.கே. எம். டி. தர்மசேன தெரிவித்தார். ஊடகமொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

கா. பொ. த உயர்தர மாணவர்கள், க.பொ.த சாதாரண தர மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்களை முதலில் பாடசாலைக்கு தயார்படுத்துவதே எங்கள் முழு நோக்கம். அது ஒக்டோபர் நடுப்பகுதியில் நடைபெறக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது இருந்தாலும் அந்த முடிவை உறுதியாக சொல்ல முடியாது.
எதிர்காலத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாங்கள் ஒரு திட்டத்தை கண்டிப்பாக உருவாக்குவோம். ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளோம். இருப்பினும், கொவிட் தொற்றின் பரவல் மற்றும் தீவிரத்தைப் கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறக்கும் திட்டம் தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad