பணியில் இருக்கும் போது மரணிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவிக்காலம் முடியும் வரை முழுச்சம்பளத்தை அவரது குடும்ப உறுப்பினருக்கு வழங்கத் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சின் செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாரிடம் வேண்டிக்கொண்டார். அத்துடன் நாட்டில் 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர் என்றும் அவர்களில் 28 பேர் மரணித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment