இன்றைய செய்தி

Post Top Ad

20 September 2021

கொரோனாவினால் இலங்கையில் 56 ஆண்களும் 47 பெண்களும் உயிரிழப்பு...!

 


நாட்டில் கொரோன தொற்றுக்கு இலக்காகி மேலும் 103 பேர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அவர்கள் அனைவரும் செப்டெம்பர் 18 மரணித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி கொரோனா தொற்றினால்  மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12125 ஆக உயர்வடைந்துள்ளது.


இதன்படி செப்டெம்பர் 18 மரணித்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 01 ஆண் 01 பெண் என்றவாரும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 11 ஆண்களும் 13 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 44 ஆண்கள் 33 பெண்கள் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் செப்டெம்பர் 18 மரணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad