மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சிறுவன் தொடர்பாக.
குறித்த சிறுவனின் தாயார் தனது மகனை தாக்கி கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளார்கள் என தாயாரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்தவரும் , தற்போது மன்னார் கள்ளியடி பகுதியில் வசித்து வருபவருமான 14 வயதுடைய நாகேந்திரன் டிலக்சன் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவது, கள்ளியடி பகுதியில் கிராம சேவகர் ஒருவருக்கு சொந்தமான மில்லுக்கு வெள்ளிக்கிழமை அரிசி திரிப்பதற்காக குறித்த சிறுவன் சென்றுள்ளான். சிறுவன் அரிசியை திரித்தி விட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் , மில் உரிமையாளரான கிராம சேவகரின் மகன் இன்னும் சிலருடன் சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மில்லில் இருந்த பணத்தினை காணவில்லை.
என்று கூறி அதை சிறுவன் தான் திருடிவிட்டான் என்று அவனை வீட்டிற்குள் வைத்து தாயின் கண் முன்னே மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.
இதன்போது தாய் மகனை தாக்கியவர்களின் கால்களில் விழுந்து கதறி அழுத போதும் , தாயை கால்களினால் உதைந்து தள்ளி விட்டு சிறுவனை மீண்டும் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
அடி வலி தாங்க முடியாத சிறுவன் கதறி அழுத நிலையில் சிறுவனை சமாதானப்படுத்தி , தாயார் தூங்க வைத்துள்ளார்.
மகன் தூங்கியதன் பின் குளிக்கச் சென்ற தாயார் குளித்து விட்டு திரும்பும் போது , மகனை தாக்கிய கிராம சேவையாளரின் கும்பல் மீண்டும் தனது வீட்டுக்குள் இருந்து வெளியேறி சென்றதை தாய் அவதானித்து வீட்டிற்குள் சென்ற பார்த்த போது தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகன் மீது தாக்குதலில் ஈடுபட்ட கும்பலே மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர் என தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment