கொரோனா தடுப்பூசியினால் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதனால் இன்றைய இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் தாமதம் கட்டுவதாக அமைச்சர் சன்ன ஜய சுமன தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்குவது குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், இது குறித்து அவர் கூறுகையில் ஒரு சில பிரதேசங்களில் இளைஞர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் தாமதப்படுத்தி வருவதாகவும் அது தொடர்பாக அறிக்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டாள் பிற் காலத்தில் பாலியல் தொடர்பான பிரச்சினை, கருத்தரித்தல் போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் இதனால் சில பிரதேசங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்வது தாமதம் ஏற்படுகிறது என்று அவர் கூறினர்.
மேலும் அவர் கூறுகையில் இது தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவ்வாறான ஆய்வுகளில் அது போன்ற எந்தவிதமான பதிப்பும் ஏற்படக்கூடிய வகையில் முடிவுகள் வெளி வரவில்லை என்பதுடன் அது திரிபு பட்ட கருத்து என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment