நாட்டில் மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர்கள் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இதன்படி, இன்றைய தினம் இதுவரை 2,641 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 485,921 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக 412,812 குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி 11296 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment