எதிர்வரும் 21ஆம் திகதி சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க நடவடிக்கை எடுக்கக்கூடிய
நிலைப்பாடு அதிகம் இருப்பதாகவும் இது
தொடர்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையிலான கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் சுகாதார, வைத்திய அதிகாரிகளின்
பரிந்துரைகள் ஜனாதிபதியிடம்
கையளிக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதுடன் இன்றைய செயலணியில் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே நாடு நான்கு வாரங்கள் முடக்கப்பட்டது. நீண்ட கால முடக்கமாகவே இதனை நாம் கருதுகின்றோம்.
தற்போது வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. ஆனால் இரண்டாயிரத்திற்கு அதிகமான தொகையாகவே தரவுகளில் வெளிப்படுகின்றது.
அதேபோல் கொவிட்
மரணங்களின் எண்ணிக்கையும் நூற்று ஐம்பதிற்கு அண்ணளவான தொகையாக பதிவாகியுள்ளது.
ஆகவே இவ்வாறான நிலைமைகளையும் நாம் கருத்தில் கொள்கின்றோம்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய கொவிட்
கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் நாட்டில் நடைமுறையில் உள்ள
தனிமைப்படுத்தல் ஊரடங்கை
மேலும் எவ்வளவு காலத்திற்கு நீட்டிப்பது என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமையவே
எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்கவும் அல்லது நாட்டை திறக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும்
ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். அதற்கு அமைய சுகாதார வைத்திய தரப்பின் பரிந்துரைகளை முன்வைக்குமாறும் அறிவுரை விடுத்துள்ளார்.
நாடு திறக்கப்படுவதற்கு முன்னர் வலுவான சுகாதார வழிமுறைகளை
நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறியுள்ளனர்.
அதற்கமைய அவர்களின் பரிந்துரைகள் சுகாதார பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள
தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை வெள்ளிக்கிழமை (இன்று) ஜனாதிபதி தலைமையில்
கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் சுகாதார பணிப்பாளரினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அதற்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
No comments:
Post a Comment