குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் அதே பகுதியினைச் சேர்ந்த 25 வயது மணமகனை இரு வீட்டாரின் சம்மதத்துடன் அந்த திருமணம் செய்து முடிதுள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 10 நாட்களின் பின் இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது.
அதற்கு அடுத்த நாள் கணவரும் அவரது பெற்றோரும் சேர்ந்து பேசிய வரதட்சணை கொண்டு வரவில்லை என அந்த பெண்ணை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதனால் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வதையும் மணமகன் நிறுத்தியுள்ளார். அத்துடன் தன்னுடன் ஒரே கட்டிலில் படுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களாக இதை பொறுத்துவந்த அந்த பெண் ஓரிரு இரவுகளில் மாத்திரம் உறவு வைத்துக்கொள்ளுமாறு கணவனிடம் விரும்பமாக கேட்டதினால் ஆத்திரமடைந்த மணமகன் அந்த பெண்ணை அடித்து தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி பெண் வீட்டை விட்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நடந்ததை கூறி அழுதுள்ளார். அதன் பின் பெண் வீட்டார் சம்பந்தி வீட்டாரை சமரசம் செய்ததன் பிறகு பெண்ணை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று மணமகள் வீட்டார் வாக்குறுதி அளித்ததால் மகளை மீண்டும் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், தொடர்ந்தும் பெண்ணை தாம்பத்ய உறவுக்கு கணவர் அனுமதிக்காமல் கணவர் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் டானிலிம்டா மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமை புகார் செய்துள்ளார். அந்த புகாரில் திருமணமாகிய உடன் கணவரும் அவரது வீட்டாரும் வரதட்சணை கொண்டு வரவில்லை என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர் என்றும், இதன் காரணமாக
பத்து நாட்களின் பின் என் கணவர் என்னோடு உடலுறவு கொள்வதை நிறுத்திவிட்டார், நாங்கள் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் போதெல்லாம், அவர் என்னுடன் விசித்திரமாகவே நடந்து கொள்கின்றார். நான் உடலுறவு விரும்பியபோது அவர் என்னை மோசமாக அடித்து தாக்கினார். அத்துடன் என்னுடைய தோற்றம் பிடிக்கவில்லை என்றும் அவர் வேறு சில பெண்ணுடன் உடலுறவு கொள்வதாகவும் கூறினார்” என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனேயடுத்து பொலிஸார் பெண்ணின் கணவர் மீதும் அவரது வீட்டார் மீதும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment