இன்றைய செய்தி

Post Top Ad

19 September 2021

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்..!

 


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மேலும் 103 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.



குறித்த அனைவரும் நேற்றைய தினம் 18 ஆம் திகதி மரணித்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.


இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 12125 ஆக உயர்வடைந்துள்ளது.


மேலும் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 504,055 ஆக அதிகரித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 432038 பூரண குணமடைந்துள்ளனர். 





.

No comments:

Post a Comment

Post Top Ad