யாழ்ப்பாணம் அரியாலை, பூம்புகார் பகுதியில் நேற்று இரவு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்தக் கொலை கூட்டுக்கொலை என பொலிஸ் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
குடும்ப வன்முறை முற்றியதன் காரணமாக மனைவி திருகுவலையால் தாக்கியதனால் கணவன் உயிரிழந்தார் என முதலில் நம்பப்பட்டது.
கணவன் மதுபோதையில் வந்து முரண்பாட்டில் ஈடுபட்டதினால் திருகுவலையை திருப்பித் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார் என மனைவியால் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
குறிப்பிட்ட சம்பவத்தில் 32 வயதுடைய து.செல்வராசா என்பவரே உயிரிழந்தவராவார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த செல்வராசா, ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்கள் அரியாலை, பூம்புகாரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பிள்ளையும் உண்டு.
இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பமாக பொலிஸாரின் தொடர் விசாரணைகளின் அடைப்படையில் பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவிக்கும், இந்த நபருக்கும் இருந்த தொடர்பின் காரணமாக எழுந்த பிரச்சினையே கொலையில் முடிந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
உயிரிழந்தவரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment