ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது...!
புத்தளம் மாவட்டம் வேப்பம்மடு பிரதேச மைய வாடியிலுருந்து 56 வயதுடைய நபரின் சடலம் புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அசலடி சில்வா முன்னிலையில் நேற்றைய தினம் 10 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக புத்தளம் வேப்பம்மடுவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது நிஸ்த்தார் எனபவரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, கடந்த சனிக்கிழமையன்று காலமான அவர் அன்றைய தினமே வேப்பம்மடு முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
எனினும் குறித்த நபர் இறந்து இரண்டு நாட்களின் பின்னர் அவரது சித்தி, அவரது மகள் என தொடர்ந்து இறந்து போயுள்ளனர், ஒரே நேரத்தில் இறந்த தாய் மற்றும் மகளின் சடலம் புத்தளம் தள வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு PCR பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுளளது.
இதன் பிறகு இவர்களது சடலம் நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 6 ஆம் திகதி மரணித்த முஹம்மது நிஸ்த்தார் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்ததையடுத்து அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment