முல்லைத்தீவு மாணிக்க புறத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈரல் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் அவர் நீண்ட காலமாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு
இருதந்ததுடன் அது எலிக்காய்ச்சல் என உறுதிபடுத்தப்பட்டது, இந் நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் 8ஆம் திகதி உயிரிழந்துள்ளர்.
அவர் தொடர்பாக மாணிக்கபுரம் விசுவமடுவை சேர்ந்த ஆறுமுகம் யாதவராயன் வயது 28 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், மேலும் அவர் குடும்பத்தை விட்டு தனியாக வாழ்வதாகவும் இதனால் கசிப்பிற்கு அடிமையாக இருந்ததாகவும் தெரிய வருகிறது.
அவரது பிரேத பரிசோதனையின் போது ஈரல், சிறுநீரகம் செயலிழந்து உள்ளது உறுதிபடுத்தப்பட்டது.
No comments:
Post a Comment