இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

வீடு ஒன்றை சுற்றி வளைத்து போதை பொருட்களை கைப்பற்றிய படையினர்..!

 


வீடு ஒன்றில் வைத்து மிகவும் நூதனமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த இருவரை விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்றைய தினம் ஊரகஸ்மஙஹந்திய,துடுவ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினை சுற்றி வளைத்த போது 3 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதோடு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 990 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக ஊரகஸ்மஙஹந்திய போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad