இன்றைய செய்தி

Post Top Ad

04 October 2021

63 வயது முதியவரால் 9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!

 


கடந்த 2015ஆம் ஆண்டு தமது வீட்டிற்கு வருகை தந்த உறவினர்களை ரயில்வே நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டு வரும் வரை அருகிலிருந்த முதியவரின் வீட்டில் காவலில் விடப்பட்ட 9 வயதுடைய சிறுமியே இவ்வாறு அம்முதியவரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய முதியவர் இது தொடர்பாக வெளியிலோ அல்லது பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுமுள்ளார், ஆனால் சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து   முதியவர் மும்பை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் முதியவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நிறுபனமானதுடன் முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad