இன்றைய செய்தி

Post Top Ad

03 October 2021

வவுனியாவில் வாள் வெட்டு தாக்குதல் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி...!



வவுனியா கோவில்குளம் பகுதியில் மது போதையில் நின்று கொண்டிருந்த குழுவொன்று வால் மற்றும் கோடளிகளைக் கொண்டு அந்த வழியாக செல்லும் பொது மக்களை தாக்க ஆரம்பித்துள்ளனர், அவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல்தாரிகள் அருகிலிருந்த வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக அங்கிருந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















No comments:

Post a Comment

Post Top Ad