இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமெனில் அரச ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான முறையில் பயணித்து சகலரும் இணங்க முற்பட்டால் நாட்டை மூடலாம். இந் நாட்டில் அன்றாட வாழ்க்கையை நடாத்தி செல்ல 80 லட்சம் பேர் உழைக்கின்றனர் அவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு அந்த பணத்தை பயன்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment