இன்றைய செய்தி

Post Top Ad

20 August 2021

அரச ஊழியர்கள் தமது சம்பளத்தில் அரசாங்கத்திற்கு தானம் செய்தால் நாடு கண்டிப்பாக முடக்கப்படும் இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!!

 



இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமெனில் அரச ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 

நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், “ஒவ்வொரு தரப்பினராக நாட்டை முடக்குமாறு யோசனை முன்வைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் மாத சம்பளத்தில் சரிபாதியை விட்டுக் கொடுத்தால் நாட்டை தாராளமாக முடக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான முறையில் பயணித்து சகலரும் இணங்க முற்பட்டால் நாட்டை மூடலாம். இந் நாட்டில் அன்றாட வாழ்க்கையை நடாத்தி செல்ல 80 லட்சம் பேர் உழைக்கின்றனர் அவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு அந்த பணத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad