இன்றைய செய்தி

Post Top Ad

20 August 2021

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாத இறுதியில் வௌியாகும்.




கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வௌியிட இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad