இன்றைய செய்தி

Post Top Ad

20 August 2021

நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு புதிய நிவாரண பொதி விநியோகம்...

 


இன்று தொடக்கம் 1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த பொதி விநியோகிக்கப்படவுள்ளது.

இது தொட‌ர்பாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசும் பொழுதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பாக 1998 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குபவதன் மூலம் குறித்த நிவாரணப் பொதிகளை வீட்டுக்கே கொண்டு வந்து தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்தோடு, 2600 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 20 அத்தியாவசியப்பொருட்கள் இந்த நிவாரணப் பொதியில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment

Post Top Ad