தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் '' மேலும் இது தனது தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டார் '' இதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே மேற்கொண்ட ஆராய்ச்சிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டு பரலவலானது அதிகரித்து வருகின்றது, பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 திகதி ஊரடங்கு சட்டம் 10 நாட்கள் அமுல்படுத்தப்பட்டு பின் அது செப்டம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment