வீட்டில் தனிமையில் இருந்த 18 வயதுடைய யுவதியொருவரை இனந்தெரியாத நபர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்ப்பட்டு குறித்த நபர் தப்பியோடியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது பண்டாரவளை, அம்பேதன்டகம பகுதியில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது, இதனை பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியின் பெற்றோர் வீட்டில் இல்லாது தனிமையிலிருந்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய பெற்றோரிடம் தனக்கேற்பட்ட நிலையினை குறித்த யுவதி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட யுவதி தற்போது பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் , யுவதி பலாத்காரம் செய்யப்பட்டது வைத்திய பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
யுவதியை துஷ்பிரயோகம் செய்த நபரைத் தேடி, பண்டாரவளை பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment